search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாராளுமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து
    X

    பாராளுமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. அந்த கட்டிடத்தின் ஒரு அறையில் பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென்று தீ பிடித்தது. உடனடியாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தீ விபத்து எச்சரிக்கை ஒலிப்பான் ஒலிக்க தொடங்கியது.

    அந்த ஓசையை கேட்டு பாராளுமன்றம் வளாகத்தில் நின்றிருந்த தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. கட்டிடத்தின் பிறபகுதிகளுக்கும் பரவாத வகையில் மீட்புப் படையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். மின்கசிவால் ஏற்பட்டதாக கருதப்படும் இந்த விபத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
    Next Story
    ×