என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கேரளாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவு
Byமாலை மலர்16 May 2016 11:33 AM IST (Updated: 16 May 2016 11:33 AM IST)
கேரள சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 140 தொகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி உம்மன் சாண்டி, கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, மத்திய முன்னாள் மந்திரி சசிதரூர், மாநில பா.ஜ.க. தலைவர் ஓ.ராஜகோபால், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
வாக்குப்பதிவு தொடங்கி நான்கு மணிநேரத்துக்கு பின்னர் காலை 11 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 28.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கேரள மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக 31.03 சதவீதம் வாக்குகளும், தலைநகர் திருவனந்தபுரத்தில் மிககுறைந்தபட்சமாக 23.10 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கேரள சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 140 தொகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி உம்மன் சாண்டி, கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, மத்திய முன்னாள் மந்திரி சசிதரூர், மாநில பா.ஜ.க. தலைவர் ஓ.ராஜகோபால், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
வாக்குப்பதிவு தொடங்கி நான்கு மணிநேரத்துக்கு பின்னர் காலை 11 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 28.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கேரள மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக 31.03 சதவீதம் வாக்குகளும், தலைநகர் திருவனந்தபுரத்தில் மிககுறைந்தபட்சமாக 23.10 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X