என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருப்பதி விலங்கியல் பூங்காவில் வெள்ளைப்புலி 4 குட்டிகள் ஈன்றது
Byமாலை மலர்16 Oct 2016 11:33 AM IST (Updated: 16 Oct 2016 11:33 AM IST)
திருப்பதி விலங்கியல் பூங்காவில் அரிய வகையான வெள்ளை புலி 4 குட்டிகளை ஈன்றது ஊழியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புலிக்குட்டிகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.
நகரி:
திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் ராணி என்ற பெண் வெள்ளை புலியும், கமலா என்ற ராயல் பெங்கால் பெண் புலியும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த இரு புலிகளிடம் இருந்து இன பெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. வெள்ளை புலியும், பெங்கால் புலியும் கருத்தரித்தன. இதையடுத்து இரண்டு புலிகளையும் பூங்கா ஊழியர்கள் கவனமுடன் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் வெள்ளை புலியும், பெங்கால் புலியும் குட்டிகளை ஈன்றது.
இதில் வெள்ளை புலிக்கு 4 குட்டிகளும், பெங்கால் புலிக்கு 3 குட்டிகளும் பிறந்தன. அனைத்து புலி குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. அவைகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த பூங்காவில் புலி குட்டிகள் ஈன்றுவது இதுவே முதல் முறையாகும்.
அரிய வகையான வெள்ளை புலி 4 குட்டிகள் ஈன்றது பூங்கா ஊழியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புலிக்குட்டிகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் ராணி என்ற பெண் வெள்ளை புலியும், கமலா என்ற ராயல் பெங்கால் பெண் புலியும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த இரு புலிகளிடம் இருந்து இன பெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. வெள்ளை புலியும், பெங்கால் புலியும் கருத்தரித்தன. இதையடுத்து இரண்டு புலிகளையும் பூங்கா ஊழியர்கள் கவனமுடன் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் வெள்ளை புலியும், பெங்கால் புலியும் குட்டிகளை ஈன்றது.
இதில் வெள்ளை புலிக்கு 4 குட்டிகளும், பெங்கால் புலிக்கு 3 குட்டிகளும் பிறந்தன. அனைத்து புலி குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. அவைகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த பூங்காவில் புலி குட்டிகள் ஈன்றுவது இதுவே முதல் முறையாகும்.
அரிய வகையான வெள்ளை புலி 4 குட்டிகள் ஈன்றது பூங்கா ஊழியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புலிக்குட்டிகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X