என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
குடியரசு தின சிறப்பு மணல் சிற்பம்: சுதர்சன் பட்நாயக் கலக்கல்
Byமாலை மலர்26 Jan 2017 10:19 AM IST (Updated: 26 Jan 2017 10:19 AM IST)
குடியரசு தினத்தை முன்னிட்டு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், சிறப்பு மணல் சிற்பத்தை வடிவமைத்து மரியாதை நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி உள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக அம்மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் அவ்வப்போது மணல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். பத்மஸ்ரீ விருது பெற்ற அவர் சர்வதேச மணல் சிற்ப போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் காளையின் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்து, கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். இந்த சிற்பம் அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நாட்டின் 68-வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக, பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் அசத்தலான ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
மூவர்ண இதயத்தை கைகளில் தாங்கிப் பிடித்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தின் அடியில், குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், இந்தியாவை நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சிற்பத்தை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக அம்மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் அவ்வப்போது மணல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். பத்மஸ்ரீ விருது பெற்ற அவர் சர்வதேச மணல் சிற்ப போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் காளையின் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்து, கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். இந்த சிற்பம் அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நாட்டின் 68-வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக, பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் அசத்தலான ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
மூவர்ண இதயத்தை கைகளில் தாங்கிப் பிடித்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தின் அடியில், குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், இந்தியாவை நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சிற்பத்தை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X