என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்து 26 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
Byமாலை மலர்12 May 2017 3:09 AM IST (Updated: 12 May 2017 3:09 AM IST)
ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்ததில் 24 பேர் பலியாகினர். அவர்களது குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்து உள்ளார்.
பரத்பூர்:
ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்ததில் 24 பேர் பலியாகினர். அவர்களது குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கடுமையான புயல் வீசியது. அப்போது பரத்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. புயல் காற்றில் இருந்து தப்பிப்பதற்காக திருமணத்துக்கு வந்திருந்தவர்கள், மண்டபத்துக்குள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது திடீரென அந்த மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் மணப்பெண்ணின் உறவினர்கள் ஆவர். மேலும் இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டு உள்ளார். உயிருள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்ததில் 24 பேர் பலியாகினர். அவர்களது குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கடுமையான புயல் வீசியது. அப்போது பரத்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. புயல் காற்றில் இருந்து தப்பிப்பதற்காக திருமணத்துக்கு வந்திருந்தவர்கள், மண்டபத்துக்குள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது திடீரென அந்த மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் மணப்பெண்ணின் உறவினர்கள் ஆவர். மேலும் இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டு உள்ளார். உயிருள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X