என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சிற்றுண்டி திருடியதற்காக இரு சிறுவர்களுக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்த கடை உரிமையாளர்
Byமாலை மலர்21 May 2017 10:41 PM IST (Updated: 21 May 2017 10:41 PM IST)
மராட்டியத்தில் சிற்றுண்டி திருடியதற்காக இரு சிறுவர்களுக்கு கடையின் உரிமையாளர் மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்.
மும்பை:
மராட்டியத்தில் சிற்றுண்டி திருடியதற்காக இரு சிறுவர்களுக்கு கடையின் உரிமையாளர் மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் தானே நகரில் உள்ள மளிகை கடையில் அப்பகுதியில் உள்ள இரு சிறுவர்கள் பசி காரணமாக காசு இல்லாததால் சிற்றுண்டி திருடி உண்டுள்ளனர். இதை கண்டு பிடித்த கடை உரிமையாளர் சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்த பின்னர் இருவருக்கும் மொட்டையடித்துள்ளார்.
பின்னர் இரு சிறுவர்களின் கழுத்திலும் செருப்பு மாலைகளை அணிவித்து சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு குழந்தைகள் நல ஆனணயத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் குழந்தைகள் நல ஆனணய அலுவலர்கள் அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டியத்தில் சிற்றுண்டி திருடியதற்காக இரு சிறுவர்களுக்கு கடையின் உரிமையாளர் மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் தானே நகரில் உள்ள மளிகை கடையில் அப்பகுதியில் உள்ள இரு சிறுவர்கள் பசி காரணமாக காசு இல்லாததால் சிற்றுண்டி திருடி உண்டுள்ளனர். இதை கண்டு பிடித்த கடை உரிமையாளர் சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்த பின்னர் இருவருக்கும் மொட்டையடித்துள்ளார்.
பின்னர் இரு சிறுவர்களின் கழுத்திலும் செருப்பு மாலைகளை அணிவித்து சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு குழந்தைகள் நல ஆனணயத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் குழந்தைகள் நல ஆனணய அலுவலர்கள் அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X