என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியின் மரணத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்5 Jan 2018 5:29 PM IST (Updated: 5 Jan 2018 5:29 PM IST)
சிறுமி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் மரணத்தண்டனை பெற்ற குற்றவாளியின் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்தியப்பிரதேசம் மாநிலம் கிவாலியார் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் வீரேந்திரா என்பவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் மரணத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது தண்டனையை மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இது குறித்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், 'இது போன்ற குற்றங்கள் செய்தவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையை பார்த்து மற்றவர்கள் தவறு செய்ய பயப்பட வேண்டும். அதனால் வீரேந்திரனுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட வேண்டும்' என கூறியது.
உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து வீரேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மாநில அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வீரேந்திரனின் மரணத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் தண்டனை விவரங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. #tamilnews
மத்தியப்பிரதேசம் மாநிலம் கிவாலியார் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் வீரேந்திரா என்பவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் மரணத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது தண்டனையை மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இது குறித்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், 'இது போன்ற குற்றங்கள் செய்தவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையை பார்த்து மற்றவர்கள் தவறு செய்ய பயப்பட வேண்டும். அதனால் வீரேந்திரனுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட வேண்டும்' என கூறியது.
உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து வீரேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மாநில அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வீரேந்திரனின் மரணத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் தண்டனை விவரங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X