என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்9 May 2018 12:25 PM GMT (Updated: 9 May 2018 12:25 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. கவுன்சிலரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJPcouncillor
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் கேசரி (40) நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கேசரியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கேசரியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேசரி துணை முதல்-மந்திரி கேஷவ் பிரசாத் மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்கோபால் நந்திக்கு நெருங்கிய நண்பர் என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேசரி குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முன் பகையின் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கேசரி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPcouncillor
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் கேசரி (40) நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கேசரியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கேசரியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேசரி துணை முதல்-மந்திரி கேஷவ் பிரசாத் மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்கோபால் நந்திக்கு நெருங்கிய நண்பர் என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேசரி குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முன் பகையின் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கேசரி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPcouncillor
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X