search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணக்கோலத்தில் தேர்வு எழுதிவிட்டு திருமணம் செய்த மாணவி
    X

    மணக்கோலத்தில் தேர்வு எழுதிவிட்டு திருமணம் செய்த மாணவி

    கர்நாடகாவில் தனது திருமண நாளன்றும் தேர்வை கைவிடாமல், தேர்வு எழுதிவிட்டு திருமணம் செய்து கொண்ட மாணவிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன. #karnatakagirlmarriage
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் மாண்ட்யா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வருபவர் காவியா. இவருக்கும், லோகித் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்திருந்தனர்.

    இந்நிலையில், திருமண தேதியில் தேர்வு அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்காக தேர்வை கைவிட மனமில்லாத காவியா, தான் நிச்சயம் தேர்வு எழுத வேண்டும் என தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, காலை 9.15 மணிக்கு மணக்கோலத்தில் தேர்வறைக்குச் சென்ற காவியா, 11 மணிக்குள் தேர்வை முடித்துவிட்டு, குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் திருமணமும் செய்துகொண்டார்.


    ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான தினமாக கருதப்படும் திருமண நாளிலும், தனது படிப்பின் மீது இருந்த ஆர்வம் மற்றும் மரியாதையால் தேர்வு எழுத வந்த காவியாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. #karnatakagirlmarriage
    Next Story
    ×