search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    150 தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும்- எடியூரப்பா
    X

    150 தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும்- எடியூரப்பா

    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் கர்நாடக மாநிலத்தில் தனது தலைமையில் ஆட்சி அமையும் எனவும் எடியூரப்பா கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    பெங்களூரு:

    மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சதானந்த கவுடா மங்களூரு அருகே புத்தூரில் உள்ள காரடி அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    பாரதிய ஜனதா முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா ஓட்டுசாவடியில் ஓட்டு போட்டார். முன்னதாக அவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து பூஜை நடத்தினார்.

    அதன் பிறகு மகன் விஜயேந்திராவுடன் சென்று வீட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டார். அதன் பிறகு ஓட்டுசாவடிக்கு சென்று காலை 7.05 மணிக்கு தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் கர்நாடக மாநிலத்தில் எனது தலைமையில் ஆட்சி அமையும் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறிறனார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    Next Story
    ×