search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் மின்னல் தாக்கியதில் 100 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
    X

    உ.பி.யில் மின்னல் தாக்கியதில் 100 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் மழையில் நேற்று மின்னல் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. #Lightning #Fire
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இந்த மாநிலத்தில் புழுதி புயலும் பலமாக தாக்கியது. இந்த புழுதி புயலில் சிக்கி 18 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், உ.பி.யின் சம்பால் நகரில் நேற்று இரவு ராஜ்புரா பகுதியில் மின்னல் தாக்கியது.
    இதில் அந்த பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. அவர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். #Lightning #Fire
    Next Story
    ×