search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் பலி
    X

    மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் பலி

    மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
    போபால்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் பஞ்சாப் மாநிலம் அகமதாபாத்துக்கு பலர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தினை கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.

    மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 47 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #busaccident
    Next Story
    ×