என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் பலி
Byமாலை மலர்21 May 2018 7:00 AM GMT (Updated: 21 May 2018 7:00 AM GMT)
மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
போபால்:
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் பஞ்சாப் மாநிலம் அகமதாபாத்துக்கு பலர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தினை கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.
மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 47 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #busaccident
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் பஞ்சாப் மாநிலம் அகமதாபாத்துக்கு பலர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தினை கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.
மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 47 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #busaccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X