search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம் - சுஷ்மா சுவராஜ் பெருமிதம்
    X

    வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம் - சுஷ்மா சுவராஜ் பெருமிதம்

    பா.ஜ.க. தலைமயிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் கடந்த 4 வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்கள் காப்பாற்றப்பட்டதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Indiansrescued #MEASushma
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை ஆற்றிய சாதனை பட்டியல் புத்தகத்தை புதுடெல்லியில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் உள்ள பல நாடுகளுக்கு நமது நாட்டின் தலைவர்கள் சென்றதே இல்லை என்பதை அறிந்து நான் வியப்படைந்தேன். எங்கள் ஆட்சி அமைந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் தீர்மானித்தோம்.

    அதன்படி, இதுவரை 186 நாடுகளுடன் மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆட்சியில் 
    வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம். வெளிநாடுகளில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட பலரை பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார். கடல்கடந்து சென்ற இந்தியர்கள் இன்று வெளிநாடுகளில் அமைதியாக வாழ்கிறார்கள்.

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Indiansrescued #MEASushma
    Next Story
    ×