search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
    X

    நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் டெல்லியைச் சேர்ந்த 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

    மருத்துவ படிப்பை விரும்பிய மாணவர்களின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்த இந்த நீட் தேர்வை தடை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி வருடந்தோறும் தவறாமல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் டெல்லியைச் சேர்ந்த பர்னவ் மெஹன்டிரடா என்ற 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் நீட் தேர்வு எழுதி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து தோல்வியுற்றதால் மனம் உடைந்த பர்னவ் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், மாணவர் பிரனவின் அறையில் இருந்த அவரது இறுதி கடிதத்தில், நீட் தேர்வு முடிவுகள் குறித்து பெற்றோரிடம் பொய் கூறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். பிரனவ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தூக்கு போட்டுக்கொள்ள முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பிரதீபா என்ற மாணவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    தரமான மருத்துவர்களை உருவாக்கும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு மரணங்களை உருவாக்கி வரும் நிலையில் அரசு கண்டுகொள்ளாமல் மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்தும் நிகழ்வு வேதனையளிக்க கூடியதாகவே உள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    Next Story
    ×