search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை - கோப்ரா கமோண்டோ, போலீஸ்காரர் உயிரிழப்பு
    X

    ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை - கோப்ரா கமோண்டோ, போலீஸ்காரர் உயிரிழப்பு

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎப் கமாண்டோ மற்றும் போலீஸ்காரர் உயிரிழந்தனர். #JharkhandEncounter
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்டுகள் தரப்பில் மட்டுமின்றி, காவல்துறை தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    இந்நிலையில், சராய்கேலா-கர்சவான் மாவட்டம் தல்பாகா அர்கி பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை இன்று காலையில் சிஆர்பிஎப் படையின் கோப்ரா கமாண்டோ பட்டாலியன் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான சண்டை நடைபெற்றது. இதில், கோப்ரா கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார். ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

    சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, மாவோயிஸ்டுகள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #JharkhandEncounter

    Next Story
    ×