search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை கொன்றால் ரூ.21 லட்சம் பரிசு - பாஜக எம்.பி
    X

    ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை கொன்றால் ரூ.21 லட்சம் பரிசு - பாஜக எம்.பி

    ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக எம்.பி அறிவித்துள்ளார். #Aurangzeb #ParveshSahibSinghVerma #ManjinderSirsa
    புதுடெல்லி:

    கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர் அவுரங்கசீப் கடத்திக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளனர். 

    இதுதொடர்பாக, மேற்கு டெல்லி தொகுதியின் பாஜக எம்.பி பர்வேஷ் சாகிப் சிங் மற்றும் டெல்லியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மஜிந்தர் எஸ் சிர்சா ஆகியோர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ வீர்ரை கடத்திக் கொன்ற பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு  வழங்கப்படும் என பதிவிட்டுள்ளனர். #Aurangzeb #ParveshSahibSinghVerma #ManjinderSirsa
    Next Story
    ×