என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோ பெண்களிடம் சில்மிஷம் செய்த ஐந்து நட்சத்திர ஓட்டல் மேலாளர் கைது
Byமாலை மலர்28 Jun 2018 2:32 PM GMT (Updated: 28 Jun 2018 2:32 PM GMT)
ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த மெக்சிகோவைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம் சில்மிஷம் செய்த ஐந்து நட்சத்திர ஓட்டல் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஓட்டல் மேலாளர் ரிஷி ராஜ் சிங் (40), மெக்சிகோ நாட்டு பெண்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றுள்ளார். அந்த பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக மெக்சிகோ நாட்டு பெண்கள் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ரிஷிராஜ் சிங் அந்த பெண்களிடம் சில்மிஷம் செய்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X