search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.200 உயர்வு- மத்திய மந்திரிசபை ஒப்புதல்
    X

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.200 உயர்வு- மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    நெல் மற்றும் சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Cabinet
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் நெல் மற்றும் சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அதன்படி நெல்லுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு மடங்குக்கு மேல் ஆதார விலையை உயர்த்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல் தர நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தி ரூ.1770 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சாதாரண ரக நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி ரூ.1750 ஆக வழங்கப்படுகிறது.


    இதே போல சோளத்துக்கான ஆதார விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தி ரூ.1700 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய பா.ஜனதா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. #Cabinet
    Next Story
    ×