search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம், மிளகாய் விளைச்சல் செய்வது குறித்து ராகுலுக்கு ஒன்றும் தெரியாது - சிவராஜ் சிங் சவுகான்
    X

    வெங்காயம், மிளகாய் விளைச்சல் செய்வது குறித்து ராகுலுக்கு ஒன்றும் தெரியாது - சிவராஜ் சிங் சவுகான்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வெங்காயம், மிளகாய் விளைச்சல் குறித்து தெரியுமா? என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். #SivarajSinghChauhan #RahulGandhi
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் மண்டாசூர் பகுதிக்கு வந்து அங்குள்ள விவசாயிகளை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அவர், தான் பிரதமராக தயாராக இருக்கிறேன் என்கிறார். ஆனால் அவரை யார் பிரதமராக்க போகிறார்கள்?

    விவசாயிகளை சென்று சந்தித்து ஆறுதல் கூறி வரும் ராகுலுக்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவை எப்படி விளைகின்றன என தெரியுமா? மிளகாய் மேல் நோக்கி வளருகிறதா, கீழ் நோக்கியா என்பதை அறிவாரா? வெங்காயம் தரைக்கு மேலே அல்லது தரைக்கு கீழே எப்படி வளர்கிறது என்பதை அறிவாரா?

    காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கீழ் ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறது. அவரது தலைமையில் நாடுவளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். #SivarajSinghChauhan #RahulGandhi
    Next Story
    ×