என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் கோர்ட்டு வளாகத்தில் கைதி சுட்டுக்கொலை
Byமாலை மலர்16 July 2018 9:20 PM GMT (Updated: 16 July 2018 9:20 PM GMT)
பீகாரில் கோர்ட்டு வளாகத்தில் கைதி அபிஷேக் ஜாவுக்கு உதவ வந்த 2 கூட்டாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், குறி தவறி, அபிஷேக் ஜா மீது பட்டதில் கைதி பலியானார்.
பாட்னா:
பீகார் மாநிலம் சியோகர் மாவட்டத்தை சேர்ந்தவன் அபிஷேக் ஜா (வயது 30). ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இவன், ஒரு வழிப்பறி வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.
அந்த வழக்கில், அபிஷேக் ஜாவை சிகாரனாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அதே சமயத்தில், அவனை தப்பிக்க வைப்பதற்காக, அவனுடைய கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
கோர்ட்டு வளாகத்தில், தன்னுடன் வந்த போலீசாரின் கண்களில் அபிஷேக் ஜா திடீரென மிளகாய் பொடியை தூவினான். அவன் தப்பிக்க முயன்றபோது, போலீசார் சுதாரித்து தடுக்க முனைந்தனர்.
அப்போது, அபிஷேக் ஜாவுக்கு உதவ வந்த 2 கூட்டாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், குறி தவறி, அபிஷேக் ஜா மீது பட்டது. உடனே கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், அபிஷேக் ஜா இறந்தான். சம்பவ இடத்தில், ஒரு கைத்துப்பாக்கியும், 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
பீகார் மாநிலம் சியோகர் மாவட்டத்தை சேர்ந்தவன் அபிஷேக் ஜா (வயது 30). ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இவன், ஒரு வழிப்பறி வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.
அந்த வழக்கில், அபிஷேக் ஜாவை சிகாரனாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அதே சமயத்தில், அவனை தப்பிக்க வைப்பதற்காக, அவனுடைய கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
கோர்ட்டு வளாகத்தில், தன்னுடன் வந்த போலீசாரின் கண்களில் அபிஷேக் ஜா திடீரென மிளகாய் பொடியை தூவினான். அவன் தப்பிக்க முயன்றபோது, போலீசார் சுதாரித்து தடுக்க முனைந்தனர்.
அப்போது, அபிஷேக் ஜாவுக்கு உதவ வந்த 2 கூட்டாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், குறி தவறி, அபிஷேக் ஜா மீது பட்டது. உடனே கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், அபிஷேக் ஜா இறந்தான். சம்பவ இடத்தில், ஒரு கைத்துப்பாக்கியும், 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X