என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் - மம்தா பானர்ஜி
Byமாலை மலர்21 July 2018 9:27 AM GMT (Updated: 21 July 2018 9:27 AM GMT)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் பேசிய அம்மாநில முதல்மந்திரி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். #TMC #MamataBanerjee
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் 1993-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 13 இளைஞரணி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருடந்தோறும் ஜூலை 21-ம் தேதி பேரணி நடத்தப்படும். அதன்படி இன்று துவங்கிய பேரணியில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பேரணியில் பேசிய மேற்கு வங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி, நாட்டின் பல இடங்களில் பலர் அநியாயமாக கொலை செய்யப்படுவதாகவும், பா.ஜ.க மக்களிடையே பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்க உள்ளதாக அறிவித்தார். மேலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
இந்த பேரணியின் போது, பாஜகவின் முன்னாள் எம்.பி. சந்த மித்ரா, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி மொய்னுல் ஹசன், காங்கிரஸை சேர்ந்த சபினா யாஸ்மின் மற்றும் மிசோரம் மாநில அரசு தலைமை வக்கீல் பிஸ்வஜித் தேப் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். #TMC #MamataBanerjee
மேற்கு வங்க மாநிலத்தில் 1993-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 13 இளைஞரணி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருடந்தோறும் ஜூலை 21-ம் தேதி பேரணி நடத்தப்படும். அதன்படி இன்று துவங்கிய பேரணியில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பேரணியில் பேசிய மேற்கு வங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி, நாட்டின் பல இடங்களில் பலர் அநியாயமாக கொலை செய்யப்படுவதாகவும், பா.ஜ.க மக்களிடையே பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்க உள்ளதாக அறிவித்தார். மேலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
இந்த பேரணியின் போது, பாஜகவின் முன்னாள் எம்.பி. சந்த மித்ரா, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி மொய்னுல் ஹசன், காங்கிரஸை சேர்ந்த சபினா யாஸ்மின் மற்றும் மிசோரம் மாநில அரசு தலைமை வக்கீல் பிஸ்வஜித் தேப் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். #TMC #MamataBanerjee
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X