search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜம்மு காஷ்மீர் - அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு
    X

    ஜம்மு காஷ்மீர் - அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. #KashmirEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். பயங்கரவாதிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். #KashmirEncounter
    Next Story
    ×