என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழைக்கு 465 பேர் பலி
Byமாலை மலர்29 July 2018 7:07 AM GMT (Updated: 29 July 2018 7:07 AM GMT)
மராட்டியம், குஜராத், அசாம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் பருவ மழைக்கு இதுவரை 465 பேர் பலியாகி உள்ளனர். #Monsoon
மும்பை:
மராட்டியம், குஜராத், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா மாநிலங்களில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல கிராமங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.
பலத்த மழையால் மும்பை மாநகரம் சில நாட்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது. இதேபோல் குஜராத், அசாம், மேற்கு வங்காளத்திலும் இயல்பை விட மழை அதிகமாக இருந்தது.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பருவ மழைக்கு இதுவரை 465 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
பருவமழைக்கு மகாராஷ்டிராவில் 138 பேரும், கேரளாவில் 125 பேரும், மேற்கு வங்காளத்தில் 116 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 34 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் 22 மாவட்டங்களும், மேற்கு வங்காளத்தில் 22 மாவட்டங்களும், அசாமில் 21 மாவட்டங்களும், கேரளாவில் 14 மாவட்டங்களும், குஜராத்தில் 10 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அசாமில் அதிகபட்சமாக 10 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 தேசிய மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்காளத்தில் 1.65 லட்சம் மக்களும், கேரளாவில் 1.43 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். #Monsoon #flood
மராட்டியம், குஜராத், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா மாநிலங்களில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல கிராமங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.
பலத்த மழையால் மும்பை மாநகரம் சில நாட்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது. இதேபோல் குஜராத், அசாம், மேற்கு வங்காளத்திலும் இயல்பை விட மழை அதிகமாக இருந்தது.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பருவ மழைக்கு இதுவரை 465 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-
மகாராஷ்டிராவில் 22 மாவட்டங்களும், மேற்கு வங்காளத்தில் 22 மாவட்டங்களும், அசாமில் 21 மாவட்டங்களும், கேரளாவில் 14 மாவட்டங்களும், குஜராத்தில் 10 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அசாமில் அதிகபட்சமாக 10 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 தேசிய மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்காளத்தில் 1.65 லட்சம் மக்களும், கேரளாவில் 1.43 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். #Monsoon #flood
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X