search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவோம் - சரத்பவார்
    X

    மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவோம் - சரத்பவார்

    1977-ல் இந்திராகாந்திக்கு எதிராக திரண்டது போல் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவோம் என்று சரத்பவார் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PMModi #SharadPawar #BJP

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் இந்திராகாந்தி அவசர நிலை கொண்டு வந்த போது என்ன நிலை நிலவியதோ அதே நிலை இப்போது நிலவுகிறது.

    அன்று இந்திராகாந்தி செய்தது போலவே பிரதமர் மோடி ஊடகங்களையும், அரசு மற்றும் அரசு ஏஜென்சிகளையும் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

    அன்று இந்திராகாந்திக்கு என்ன எதிர்ப்பு இருந்ததோ அதே போன்ற எதிர்ப்பு இப்போது மோடிக்கு ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால் மக்கள் அவருக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறார்கள்.

    1977-ல் இந்திராகாந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்து வலுவான ஒரு அமைப்பை உருவாக்க முடியுமா? என்ற நிலை இருந்தது. மக்களும் சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

    ஆனால், கட்சிகளும், தலைவர்களும் இதை சவாலாக ஏற்று ஒரு வலுவான அமைப்பை அன்று உருவாக்கினார்கள்.


    அப்போது தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதை மற்ற கட்சி தலைவர்கள் கேட்டார்கள். பல தலைவர்களும் தங்கள் கட்சியை மறந்து விட்டு ஒரே கட்சிக்கு வந்தனர்.

    ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதேபோல் மோடிக்கு எதிராக சோனியா காந்தி, தேவேகவுடா மற்றும் நானும் சேர்ந்து ஒரு வலுவான அணியை உருவாக்குவோம். எங்கள் 3 பேருக்குமே பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை.

    எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக நிற்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே திட்டம்.

    அதே நேரத்தில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவது என்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் மேற்கு வங்காளம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.

    எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியில் கொண்டு வரப்படும்.

    நானும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தலைவர்களிடமும் இது சம்பந்தமாக பேசி கொண்டு இருக்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பல வகைகளில் முன்னேற்றம் தெரிகிறது. அவரும் என்னுடைய கருத்துக்களுக்கு ஒத்து போகிறார்.

    தேர்தலுக்கு முன்பு யாரையும் தலைவராக முன்னிறுத்த கூடாது என்பதிலும் ராகுல்காந்தி தெளிவான திட்டத்தில் இருக்கிறார். அது சரியான நடவடிக்கை.

    சோனியா காந்தி எப்போதுமே கூட்டணி தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பார். அதேபோல் ராகுல்காந்தியும் தாயாரை போல் நடந்து கொள்கிறார்.

    நான் சமீபத்தில் மாயாவதியை சந்தித்தேன். அவர் உத்தரபிரதேசத்தை பொறுத்த வரை சமாஜ்சாடி மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார்.

    அதேபோல் மற்ற மாநிலங்களிலும் தனது கட்சிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறார்.

    இவ்வாறு சரத்பவார் கூறினார். #PMModi #SharadPawar #BJP

    Next Story
    ×