search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கனமழை எதிரொலி - கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தல்
    X

    கனமழை எதிரொலி - கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தல்

    கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்க குடிமக்கள் தங்கள் பயணங்களை தள்ளிவைக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. #KeralaFloods #KeralaRain
    Next Story
    ×