என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தன்று சபாநாயகர் தேசிய கொடியேற்றக் கூடாது - கோவா காங்கிரஸ் கண்டனம்
Byமாலை மலர்10 Aug 2018 10:51 PM GMT (Updated: 10 Aug 2018 10:51 PM GMT)
மனோகர் பாரிக்கர் வெளிநாட்டில் இருப்பதால், கோவா சபாநாயகர் தேசிய கொடியேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar #IndependenceDay
பனாஜி:
கோவா முதல் மந்திரியாக இருந்து வருபவர் மனோகர் பாரிக்கர். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக, நேற்று அமெரிக்கா சென்றார். வரும் 17ம் தேதி அவர் கோவா திரும்புகிறார்.
இதையடுத்து, வரும் சுதந்திர தினத்தில் சபாநாயகர் பிரமோத் சாவந்த் தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகர் தேசிய கொடி ஏற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுதந்திர தினவிழாவில் முதல்மந்திரி டான் கொடியேற வேண்டும். அவர் அப்படி வரமுடியாத நிலையில், அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் தான் கொடியேற்ற வேண்டும். சபாநாயகர் தேச்ய கொடி ஏற்றுவது விதிகளை மீறிய செயலாகும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X