search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசு பாதுகாப்பு விவகாரம்- பா.ஜனதாவில் இருந்து தெலுங்கானா எம்எல்ஏ விலகல்
    X

    பசு பாதுகாப்பு விவகாரம்- பா.ஜனதாவில் இருந்து தெலுங்கானா எம்எல்ஏ விலகல்

    தெலுங்கானாவில் பசு பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்காததால் பாஜக எம்எல்ஏ ஒருவர் கட்சியில் இருந்து விலகியிருப்பது சலசலப்பை உருவாக்கி உள்ளது. #CowProtection #BJPMLAResigns #TelanganaBJPMLA
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கோஷமகால் சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினர் ராஜா சிங் லோத் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதில், பசு பாதுகாப்புக்கு கட்சி தலைமை உரிய ஆதரவு தராததால் கட்சியில் இருந்து வெளியேறியிருப்பதாகவும், மாநில பாஜக தலைவர் லட்சுமணனிடம் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

    ‘என்னைப் பொருத்தவரை இந்து தர்மம் மற்றும் பசு பாதுகாப்பு ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பேன். அதன்பிறகுதான் அரசியல். பசு பாதுகாப்பிற்பிற்காக இப்போது பாஜகவில் இருந்து விலகியிருக்கிறேன்.

    பசு பாதுகாப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை பிரச்சனை எழுப்பினேன். ஆனால் கட்சி எனக்கு எந்த ஆதரவும் தரவில்லை.  இனி நானும், எனது குழுவினரும் (பசு பாதுகாவலர்கள்) தெருவில் இறங்கி போராடுவோம். பசு பாதுகாப்பிற்காக எதையும் செய்வோம்’ என்றும் ராஜா சிங் லோத் கூறியுள்ளார்.

    பாஜகவுக்கு மேற்கொண்டு எந்த தொந்தரவும் கொடுக்க விரும்பாததால், ராஜினாமா செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CowProtection #BJPMLAResigns #TelanganaBJPMLA
    Next Story
    ×