search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ளச் சேதங்களுக்கு பீகார், அரியானா சார்பில் தலா ரூ.10 கோடி நிதியுதவி
    X

    கேரளா வெள்ளச் சேதங்களுக்கு பீகார், அரியானா சார்பில் தலா ரூ.10 கோடி நிதியுதவி

    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு பீகார் மற்றும் அரியானா அரசின் சார்பில் தலா 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRains #KeralaFloods
    பாட்னா:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.



    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் 10 கோடி, டெல்லி அரசின் சார்பில் 10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடி என நிதியுதவி குவிந்து வருகின்றன.

    அவ்வகையில் கேரளா மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

    இதேபோல், அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். #KeralaRains #KeralaFloods 
    Next Story
    ×