என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பாஜகவுடன் திமுக நெருங்குவதால் எங்களுக்கு கவலை இல்லை - தம்பிதுரை
Byமாலை மலர்27 Aug 2018 8:12 AM GMT (Updated: 27 Aug 2018 8:28 AM GMT)
பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #Thambidurai
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்று கட்சியின் கருத்துக்களை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி அதிமுக சார்பில் வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர்கூட விடுபடக்கூடாது என கூறினோம்.
தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்போம். வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு எந்திரம் முறையோ எதுவாக இருந்தாலும் தவறு நேரக்கூடாது. வாக்குச்சீட்டு முறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டதால் அதிமுகவுக்கு ஆட்சேபம் இல்லை.
பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்று கட்சியின் கருத்துக்களை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி அதிமுக சார்பில் வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர்கூட விடுபடக்கூடாது என கூறினோம்.
தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்போம். வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு எந்திரம் முறையோ எதுவாக இருந்தாலும் தவறு நேரக்கூடாது. வாக்குச்சீட்டு முறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டதால் அதிமுகவுக்கு ஆட்சேபம் இல்லை.
பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X