என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு?
Byமாலை மலர்27 Aug 2018 8:39 PM GMT (Updated: 27 Aug 2018 8:39 PM GMT)
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. #RSS #FutureBharat #RahulGandhi
புதுடெல்லி:
டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் அருண் குமார் நேற்று தெரிவித்தார். அவரிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “பல்வேறு அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார். ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #RSS #FutureBharat #RahulGandhi
டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் அருண் குமார் நேற்று தெரிவித்தார். அவரிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “பல்வேறு அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார். ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #RSS #FutureBharat #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X