என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேட்டி
Byமாலை மலர்25 Sep 2018 2:27 AM GMT (Updated: 25 Sep 2018 2:27 AM GMT)
சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. யஷவந்த்ராயகவுடா பட்டீல் பரபரப்பான கருத்தை கூறி இருக்கிறார். #Siddaramaiah #Congress
பெங்களூரு :
விஜயாபுரா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷவந்த்ராயகவுடா பட்டீல் விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இந்த கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அலமட்டி அணை நிரம்பியது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி அந்த அணைக்கு பாகின பூஜை செய்யவில்லை. இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களை முதல்-மந்திரி அலட்சியப்படுத்துவதால், வட கர்நாடகத்தில் தனி மாநில குரல் எழுகிறது. கர்நாடகம் எப்போதும் அகண்ட கர்நாடகமாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி குமாரசாமி அனைத்து எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை பெற்று நிர்வாகத்தை நடத்த வேண்டும். கர்நாடகத்தின் இன்றைய நிலைக்கு தொங்கு சட்டசபையே காரணம் ஆகும். முன்பு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்தன. இப்போது அந்த வேகம் குறைந்துவிட்டது. இந்த அம்சங்களை எல்லாம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுத்துக் கூறுவேன்.
சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரசார் விரும்புகிறார்கள். நான் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ளேன். வாரிய தலைவர் பதவி வழங்கினாலும் பரவாயில்லை. ஆபரேஷன் தாமரையில் நான் விழ மாட்டேன். நான் சாகும் வரை காங்கிரசிலேயே நீடிப்பேன். வேறு கட்சிகளுக்கு செல்லும் திட்டம் இல்லை.
இவ்வாறு யஷ்வந்த்ராய கவுடா பட்டீல் கூறினார். #Siddaramaiah #Congress
விஜயாபுரா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷவந்த்ராயகவுடா பட்டீல் விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இந்த கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அலமட்டி அணை நிரம்பியது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி அந்த அணைக்கு பாகின பூஜை செய்யவில்லை. இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களை முதல்-மந்திரி அலட்சியப்படுத்துவதால், வட கர்நாடகத்தில் தனி மாநில குரல் எழுகிறது. கர்நாடகம் எப்போதும் அகண்ட கர்நாடகமாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி குமாரசாமி அனைத்து எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை பெற்று நிர்வாகத்தை நடத்த வேண்டும். கர்நாடகத்தின் இன்றைய நிலைக்கு தொங்கு சட்டசபையே காரணம் ஆகும். முன்பு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்தன. இப்போது அந்த வேகம் குறைந்துவிட்டது. இந்த அம்சங்களை எல்லாம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுத்துக் கூறுவேன்.
சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரசார் விரும்புகிறார்கள். நான் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ளேன். வாரிய தலைவர் பதவி வழங்கினாலும் பரவாயில்லை. ஆபரேஷன் தாமரையில் நான் விழ மாட்டேன். நான் சாகும் வரை காங்கிரசிலேயே நீடிப்பேன். வேறு கட்சிகளுக்கு செல்லும் திட்டம் இல்லை.
இவ்வாறு யஷ்வந்த்ராய கவுடா பட்டீல் கூறினார். #Siddaramaiah #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X