என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Byமாலை மலர்27 Sep 2018 7:49 AM GMT (Updated: 27 Sep 2018 7:49 AM GMT)
தெலுங்கானா மாநில எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
நகரி:
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.
மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.
மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X