என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்தால் மக்களை மறந்துவிடும் - அமித் ஷா காட்டம்
Byமாலை மலர்6 Oct 2018 1:12 PM GMT (Updated: 6 Oct 2018 1:12 PM GMT)
ம.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி ஏழை மற்றும் விவசாயிகளுக்காக பாடுபடும் கட்சி என தெரிவித்தார். #AmitShah
போபால் :
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதால் வரும் நவம்பர் 28-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதனிடையே அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. மலை மாவட்டமான ஜபுவாவில் பாஜக ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தி வருவார், காங்கிரஸ்காரர்கள் வருவார்கள், வளர்ச்சி பற்றி பேசுவார்கள், ஜாதி மதத்தை பற்றி பேசுவார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்தவுடன் மக்களைப் பற்றி பேசியது எல்லாம் மறந்துவிட்டு மக்களுக்கான(பழங்குடியினர்) நலத்திட்ட பணத்தை அவர்களின் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார்கள்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ ஏழைகள், விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் கட்சி. எங்கள் ஆட்சியில் நலத் திட்டங்களுக்கான பணத்தை மக்களின் வீட்டுக்கு கொண்டு சேர்ப்போம். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஆனால், ஜபுவா மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த போது, பிரதமர் மோடி இந்த ஆட்சி ஏழைகளுக்கும், விவசாயிகளுக்குமான ஆட்சி என தெரிவித்தார். இந்த வார்த்தைகள் அவரின் இதயத்தில் இருந்து நேரடியாக வந்ததாகும்.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை, ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஆதிவாசி கல்யான் மந்த்ராலயா ஏற்படுத்தப்பட்டது.
இந்த மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கேட்கிறேன் பழங்குடியினருக்கு என உங்கள் ஆட்சியின் போது பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற முடியுமா? ஆனால், பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். #AmitShah
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதால் வரும் நவம்பர் 28-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதனிடையே அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. மலை மாவட்டமான ஜபுவாவில் பாஜக ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தி வருவார், காங்கிரஸ்காரர்கள் வருவார்கள், வளர்ச்சி பற்றி பேசுவார்கள், ஜாதி மதத்தை பற்றி பேசுவார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்தவுடன் மக்களைப் பற்றி பேசியது எல்லாம் மறந்துவிட்டு மக்களுக்கான(பழங்குடியினர்) நலத்திட்ட பணத்தை அவர்களின் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார்கள்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ ஏழைகள், விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் கட்சி. எங்கள் ஆட்சியில் நலத் திட்டங்களுக்கான பணத்தை மக்களின் வீட்டுக்கு கொண்டு சேர்ப்போம். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஆனால், ஜபுவா மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த போது, பிரதமர் மோடி இந்த ஆட்சி ஏழைகளுக்கும், விவசாயிகளுக்குமான ஆட்சி என தெரிவித்தார். இந்த வார்த்தைகள் அவரின் இதயத்தில் இருந்து நேரடியாக வந்ததாகும்.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை, ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஆதிவாசி கல்யான் மந்த்ராலயா ஏற்படுத்தப்பட்டது.
இந்த மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கேட்கிறேன் பழங்குடியினருக்கு என உங்கள் ஆட்சியின் போது பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற முடியுமா? ஆனால், பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். #AmitShah
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X