என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பள்ளி சுவரில் ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகளுக்கு அடி உதை
Byமாலை மலர்7 Oct 2018 2:34 PM GMT (Updated: 7 Oct 2018 2:34 PM GMT)
பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா :
பீகார் மாநிலம், தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் சுவரில் சில மாண்வர்கள் சேர்ந்து மாணவிகளை பற்றி ஆபாச வாசகங்கள் எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் அதை உடனடியாக அழித்துள்ளனர்.
இருந்தாலும் தொடர்ந்து அந்த மாணவர்கள் ஆபாச வாசகங்களை எழுதிவந்ததால், அவர்களுள் மோகன் எனும் மாணவனிடம் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் மாணவிகள் சிலர் சேர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மோகன் மாணவிகளை பற்றி அபாசமாக பேசியதால் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மோகனின் தாயார் உள்பட சில பெண்கள் பள்ளிக்கு வந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்த 30 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் குணமடைந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய நிலையில், இன்னும் 14 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்பாங்கா போலீஸ் ஐ.ஜி. திரிவெனிகஞ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பீகார் மாநிலம், தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் சுவரில் சில மாண்வர்கள் சேர்ந்து மாணவிகளை பற்றி ஆபாச வாசகங்கள் எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் அதை உடனடியாக அழித்துள்ளனர்.
இருந்தாலும் தொடர்ந்து அந்த மாணவர்கள் ஆபாச வாசகங்களை எழுதிவந்ததால், அவர்களுள் மோகன் எனும் மாணவனிடம் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் மாணவிகள் சிலர் சேர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மோகன் மாணவிகளை பற்றி அபாசமாக பேசியதால் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மோகனின் தாயார் உள்பட சில பெண்கள் பள்ளிக்கு வந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்த 30 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் குணமடைந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய நிலையில், இன்னும் 14 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்பாங்கா போலீஸ் ஐ.ஜி. திரிவெனிகஞ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X