என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதாவுக்கு எதிராக பேரணி- சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு
Byமாலை மலர்10 Oct 2018 7:09 AM GMT (Updated: 10 Oct 2018 7:09 AM GMT)
வருகிற ஜனவரி 19-ந்தேதி கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக நடைபெற உள்ள மிகப் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்குமாறு சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். #BJP #ChandrababuNaidu #MamataBanerjee
கொல்கத்தா:
பாராளுமன்றத்துக்கு வருகிற 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
வருகிற ஜனவரி 19-ந்தேதி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் பங்கேற்குமாறு பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட அவர் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு கடிதம் அனுப்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்தார்.
தேசிய அளவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். கொல்கத்தா சென்று மம்தாபானர்ஜியை சந்தித்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். காங்கிரசை கடுமையாக எதிர்க்க தொடங்கினார்.
அதையடுத்து பா.ஜனதாவுடன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் பரவின. ஆனால் அதை 2 கட்சிகளும் மறுத்தன. ஆனால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் பிரிந்த பிறகு சந்திரபாபுநாயுடு பா.ஜனதாவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். எனவே இவருக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்தார். தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. #BJP #ChandrababuNaidu #MamataBanerjee
பாராளுமன்றத்துக்கு வருகிற 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
வருகிற ஜனவரி 19-ந்தேதி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் பங்கேற்குமாறு பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட அவர் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு கடிதம் அனுப்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்தார்.
தேசிய அளவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். கொல்கத்தா சென்று மம்தாபானர்ஜியை சந்தித்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். காங்கிரசை கடுமையாக எதிர்க்க தொடங்கினார்.
அதையடுத்து பா.ஜனதாவுடன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் பரவின. ஆனால் அதை 2 கட்சிகளும் மறுத்தன. ஆனால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் பிரிந்த பிறகு சந்திரபாபுநாயுடு பா.ஜனதாவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். எனவே இவருக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்தார். தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. #BJP #ChandrababuNaidu #MamataBanerjee
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X