search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் வன அதிகாரியை மிரட்டிய எம்எல்ஏ மீது வழக்கு
    X

    கேரளாவில் வன அதிகாரியை மிரட்டிய எம்எல்ஏ மீது வழக்கு

    கேரளாவில் வன அதிகாரியை மிரட்டிய கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மண்ணார்க்காடு காஞ்சிரப்புழாவில் ஆக்கிரமிப்புக்கு எதிராக வன ரேஞ்சர் நடவடிக்கை எடுத்தார்.

    இதனையடுத்து வன அதிகாரியை கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ., விஜயதாஸ் வனரேஞ்சருக்கு போன் செய்து உனது காலை உடைப்போன் என்று மிரட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்நிலையில்வன அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மண்ணார்க்காடு போலீசார் எம்.எல்.ஏ., விஜயதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்து எம்.எல்.ஏ., விஜயதாஸ் கூறும்போது, வன ஊழியர்கள் பழங்குடி மக்களை வீடு புகுந்து மிட்டியுள்ளனர். அவர்களின் விவசாய நிலங்களில் உள்ள தண்ணணீர் குழாயை உடைத்து பயிர்களை சேதப்படுத்தினர்.

    1987-க்கு முன்பே இங்கு குடியிருந்த மக்களிடம் அதற்கான ஆவணங்களும் உள்ளன. இது குறித்து வன ரேஞ்சருக்கு போனில் அறிவுரை மட்டுமே கூறினேன். மிரட்டவில்லை. மிரட்டியதுபோன்ற குரல் என்னுடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×