என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி: டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்5 Dec 2018 1:43 AM GMT (Updated: 5 Dec 2018 1:43 AM GMT)
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #DKShivakumar
பெங்களூரு :
நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் முன்னாள் மந்திரிகள் 3 பேர் உள்ளனர். அது யார் என்பது எங்களுக்கு தெரியும். ‘நெருப்பு இல்லாமல் புகையுமா?’.
ஜிந்தால் மருத்துவமனையில் என்ன நடந்தது, யார்-யாருக்கு நெருக்கடி கொடுத்தனர் என்பதும் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் தெரியாமல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. யார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் செயல் தலைவரை கைது செய்துள்ளனர். இதை கண்டிக்கிறேன். இது ஜனநாயக படுகொலை ஆகும். முதல்- மந்திரி சந்திரசேகர் ராவ் தோல்வி பயத்தால், இவ்வாறு செய்கிறார். காங்கிரஸ் கட்சி எப்போதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது இல்லை. யார் பிரசாரம் செய்ய வந்தாலும் அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். #BJP #DKShivakumar
நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் முன்னாள் மந்திரிகள் 3 பேர் உள்ளனர். அது யார் என்பது எங்களுக்கு தெரியும். ‘நெருப்பு இல்லாமல் புகையுமா?’.
ஜிந்தால் மருத்துவமனையில் என்ன நடந்தது, யார்-யாருக்கு நெருக்கடி கொடுத்தனர் என்பதும் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் தெரியாமல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. யார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் செயல் தலைவரை கைது செய்துள்ளனர். இதை கண்டிக்கிறேன். இது ஜனநாயக படுகொலை ஆகும். முதல்- மந்திரி சந்திரசேகர் ராவ் தோல்வி பயத்தால், இவ்வாறு செய்கிறார். காங்கிரஸ் கட்சி எப்போதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது இல்லை. யார் பிரசாரம் செய்ய வந்தாலும் அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். #BJP #DKShivakumar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X