என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் கடும் குளிர்- பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க தேவஸ்தானம் உத்தரவு
Byமாலை மலர்22 Dec 2018 4:52 AM GMT (Updated: 22 Dec 2018 4:52 AM GMT)
திருப்பதியில் கடும் குளிர் நிலவுவதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Tirupati
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் வாகனங்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக மின்வயர், கேபிள், பக்திசேனல் வயர், கண்காணிப்பு கேமரா வயர்கள் செல்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக தரைவழியாக வயர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
நான்கு மாட வீதிகளில் இரும்பு கேட்டுகளை சீரமைத்து அமைக்க வேண்டும். அதுமட்டுமல்ல திருப்பதியில் உள்ள தெப்பகுளத்தை சுற்றியுள்ள இரும்பு தடுப்புகளை பித்தளை தடுப்புகளாக மாற்றப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள மரத்தேர் புதுப்பிக்க வேண்டும். மேலும் ரிங்ரோட்டில் மரக்கன்று, செடிகள் நடப்படும். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தை சீரமைத்து பொதுமக்களின் வருகையை அதிகரிக்க வேண்டும்.
இந்த மாதம் குளிர்காலம் என்பதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க வேண்டும். மேலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் வசதி மேற்கொள்ள வேண்டும்.
கபிலேஸ்வரசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து முடித்து உட்கார்ந்து செல்வதற்கு இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #Tirupati
திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் வாகனங்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக மின்வயர், கேபிள், பக்திசேனல் வயர், கண்காணிப்பு கேமரா வயர்கள் செல்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக தரைவழியாக வயர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
நான்கு மாட வீதிகளில் இரும்பு கேட்டுகளை சீரமைத்து அமைக்க வேண்டும். அதுமட்டுமல்ல திருப்பதியில் உள்ள தெப்பகுளத்தை சுற்றியுள்ள இரும்பு தடுப்புகளை பித்தளை தடுப்புகளாக மாற்றப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள மரத்தேர் புதுப்பிக்க வேண்டும். மேலும் ரிங்ரோட்டில் மரக்கன்று, செடிகள் நடப்படும். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தை சீரமைத்து பொதுமக்களின் வருகையை அதிகரிக்க வேண்டும்.
இந்த மாதம் குளிர்காலம் என்பதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க வேண்டும். மேலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் வசதி மேற்கொள்ள வேண்டும்.
கபிலேஸ்வரசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து முடித்து உட்கார்ந்து செல்வதற்கு இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #Tirupati
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X