என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பா.ஜனதா வேட்பாளர் முன்னிலை
Byமாலை மலர்23 Dec 2018 4:29 AM GMT (Updated: 23 Dec 2018 8:19 AM GMT)
குஜராத் மாநில ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா வேட்பாளர் கன்வார்ஜி பவாலியா முன்னிலை வகிக்கிறார். #Jasdan #KunvarjiBavaliya #BJP
குஜராத் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கன்வார்ஜி பவாலியா. இவர் கடந்த குஜராத் தேர்தலின்போது ஜஸ்டன் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இவர் ஐந்து முறை எம்எல்ஏ-ஆகவும், ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை எம்பி-யாகவும் இருந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தன்னைப்போன்ற மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டி காங்கிரஸில் இருந்து விலகினார். அத்துடன் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
காங்கிரஸில் இருந்து விலகிய அன்றைய தினமே பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் ஜஸ்டன் தொகுதிக்கு கடந்த 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
பா.ஜனதா சார்பில் கன்வார்ஜி பவாலியா நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் அவ்சார் நஹியா போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 19 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் மூன்று சுற்றுகள் முடிவில் கன்வார்ஜி பவாலியா 2700 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.
மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு மதியம் 12.30 மணியளவில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கன்வார்ஜி பவாலியா 84,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் 75,044 வாக்குகள் பெற்றிருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் தன்னைப்போன்ற மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டி காங்கிரஸில் இருந்து விலகினார். அத்துடன் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
காங்கிரஸில் இருந்து விலகிய அன்றைய தினமே பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் ஜஸ்டன் தொகுதிக்கு கடந்த 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
பா.ஜனதா சார்பில் கன்வார்ஜி பவாலியா நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் அவ்சார் நஹியா போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 19 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் மூன்று சுற்றுகள் முடிவில் கன்வார்ஜி பவாலியா 2700 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.
மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு மதியம் 12.30 மணியளவில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கன்வார்ஜி பவாலியா 84,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் 75,044 வாக்குகள் பெற்றிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X