என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாலக்காடு அருகே நகை கடை கொள்ளையர்கள் கைது
பாலக்காடு:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாசுக்கு நகை கடை கொள்ளையர்கள் பாலக்காடு பகுதியில் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து ஆலத்தூர் இன்ஸ்பெக்டர் எலிசபெத் தலைமையில் போலீசார் ஆலத்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது நகை கடை கொள்ளையர்களான கண்ணம்பிரையை சேர்ந்த அப்துல் சலாம் (24), பாம்பாடி ரெலின் ஜோசப் குரியன் (24), சங்கனாச்சேரி ஜாக்சன் (24) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் கைத் துப்பாக்கி வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருசக்கர வாகனம், தங்க செயின்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் விசாரித்த போது ஆலத்தூர், வடக்கஞ்சேரியில் பாதுகாப்பு இல்லாத நகை கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது.
மேலும் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளில் கொள்ளையடிக்க திட்டம தீட்டி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து 3 பேரும் 5கைது செய்யப்பட்டனர். பின்னர் பாலக்காடு சிறையில் அடைக்கப்பட்டனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்