என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்டாவில் கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் இனி 5000 ரூபாய் அபராதம்
Byமாலை மலர்17 Jan 2019 5:40 AM GMT (Updated: 17 Jan 2019 5:40 AM GMT)
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கால்நடைகளை கட்டிப் போடாமல் சாலைகளில் திரியவிட்டால் இனி 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. #NoidaAuthority
நொய்டா:
உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில், கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள், உரிய இடங்கள் மற்றும் கொட்டகைகளில் கட்டிப்போடாமல் சாலைகளில் அவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் கால்நடைகள் சாலைகளில் திரிவது குறைந்தபாடில்லை. எனவே, அபராத தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நொய்டா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில், ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அனைத்து உரிமையாளர்களும் தங்கள் கால்நடைகளை தகுதியான இடங்களில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறார்கள். விபத்துக்களுக்கு வழிவகுக்கும் வகையில் சாலைகள் அல்லது பொது இடங்களில் கால்நடைகளை செல்ல அனுமதிக்கக் கூடாது. அவற்றை சரியான முறையில் கட்டி வைக்க தவறினால் அபராதத்துடன், உரிய தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் சாலைகளில் திரிந்த 475-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கோ சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், 75 கால்நடை உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி தங்கள் கால்நடைகளை பெற்று சென்றுள்ளனர்.
நொய்டாவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் கோ சாலை நிறுவப்பட்டு, தற்போது 1,325 கால்நடைகள் பராமரிப்பில் உள்ளன. #NoidaAuthority
உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில், கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள், உரிய இடங்கள் மற்றும் கொட்டகைகளில் கட்டிப்போடாமல் சாலைகளில் அவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் கால்நடைகள் சாலைகளில் திரிவது குறைந்தபாடில்லை. எனவே, அபராத தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நொய்டா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில், ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அனைத்து உரிமையாளர்களும் தங்கள் கால்நடைகளை தகுதியான இடங்களில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறார்கள். விபத்துக்களுக்கு வழிவகுக்கும் வகையில் சாலைகள் அல்லது பொது இடங்களில் கால்நடைகளை செல்ல அனுமதிக்கக் கூடாது. அவற்றை சரியான முறையில் கட்டி வைக்க தவறினால் அபராதத்துடன், உரிய தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் சாலைகளில் திரிந்த 475-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கோ சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், 75 கால்நடை உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி தங்கள் கால்நடைகளை பெற்று சென்றுள்ளனர்.
நொய்டாவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் கோ சாலை நிறுவப்பட்டு, தற்போது 1,325 கால்நடைகள் பராமரிப்பில் உள்ளன. #NoidaAuthority
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X