என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் லஞ்சம் வாங்கக்கூடாது என்று என் தாய் சத்தியம் வாங்கினார்- பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Byமாலை மலர்5 Feb 2019 8:19 AM GMT (Updated: 5 Feb 2019 8:19 AM GMT)
என்ன வேலை செய்தாலும் லஞ்சம் மட்டும் வாங்க கூடாது என தன் தாய் சத்தியம் வாங்கியதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார். #PMModi
புது டெல்லி:
பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வெளியாகி வருகிறது. முந்தைய பதிவுகளில் மோடி தனது இளமைக்கால அனுபவங்களையும், நண்பர்கள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். தற்போதைய பதிவில் தனது தாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில்,
‘நிறைய பேர் என்னிடம் நீங்கள் பிரதமரானபோது உங்கள் தாய் அதை எப்படி பார்த்தார் என்று கேட்டுள்ளனர். நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது.
என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் என் தாய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் குஜராத் முதல்வராக தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால் என் தாய் என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு கட்டி அணைத்துக்கொண்டார். நான் எப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையே தான் செய்வார். அதுதான் அவரின் குணம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது.
நான் முதல்வர் ஆன பிறகு என் தாய் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து அதை தினமும் என்னை கூறச்சொன்னார். அவர் என்னிடம், ‘நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு. அந்த பாவத்தை எப்போதும் செய்யக்கூடாது’ எனக் கூறினார்.
அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் கூறுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு உடுத்த நல்ல உடைகூட இல்லாமல் அவர் இருந்தார். அதனால் ஒரு நல்ல நாளில் என்னிடம் அந்த சத்தியத்தை பெற்றுக் கொண்டார்.
நான் சாதாரண வேலையில் இருக்கிறேன் என யாரேனும் என் தாயிடம் கூறினாலும் அவர் ஊருக்கே மிட்டாய் அளித்துக் கொண்டாடுவார். அவரைப் பொறுத்தவரை முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது.
தன் மகன் சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பம்.’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMModi
பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வெளியாகி வருகிறது. முந்தைய பதிவுகளில் மோடி தனது இளமைக்கால அனுபவங்களையும், நண்பர்கள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். தற்போதைய பதிவில் தனது தாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில்,
‘நிறைய பேர் என்னிடம் நீங்கள் பிரதமரானபோது உங்கள் தாய் அதை எப்படி பார்த்தார் என்று கேட்டுள்ளனர். நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது.
என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் என் தாய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் குஜராத் முதல்வராக தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
நான் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்பதற்கு முன்னால் டெல்லியில் தங்கியிருந்தேன். என் தாய் அகமதாபாத்தில் என் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அப்போது டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும்போது மக்கள் அதை விழாவாக கொண்டாடினர்.
ஆனால் என் தாய் என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு கட்டி அணைத்துக்கொண்டார். நான் எப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையே தான் செய்வார். அதுதான் அவரின் குணம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது.
நான் முதல்வர் ஆன பிறகு என் தாய் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து அதை தினமும் என்னை கூறச்சொன்னார். அவர் என்னிடம், ‘நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு. அந்த பாவத்தை எப்போதும் செய்யக்கூடாது’ எனக் கூறினார்.
அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் கூறுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு உடுத்த நல்ல உடைகூட இல்லாமல் அவர் இருந்தார். அதனால் ஒரு நல்ல நாளில் என்னிடம் அந்த சத்தியத்தை பெற்றுக் கொண்டார்.
நான் சாதாரண வேலையில் இருக்கிறேன் என யாரேனும் என் தாயிடம் கூறினாலும் அவர் ஊருக்கே மிட்டாய் அளித்துக் கொண்டாடுவார். அவரைப் பொறுத்தவரை முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது.
தன் மகன் சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பம்.’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X