என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
காந்தியின் இந்தியாவா, கோட்சேவின் இந்தியாவா? - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி கேள்வி
Byமாலை மலர்11 March 2019 1:16 PM GMT (Updated: 11 March 2019 1:16 PM GMT)
மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா, கோட்சேவின் இந்தியா தேவையா? என்பதை வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசார் தெளிவுப்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #MahatmaGandhi #Godse #Rahulgandhi #Congressboothworkers
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக களமிறங்க தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசினார்.
‘இந்தியாவில் தயாரியுங்கள் என்று கூறிவரும் பிரதமர் மோடி பயன்படுத்தும் சட்டை, காலணிகள் மற்றும் அவர் செல்பி எடுக்க பயன்படுத்தும் கைபேசி போன்றவை சீனாவில் தயாரிக்கப்பட்டதாக உள்ளது. மக்களுக்கு நாம் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிப்போம் என்று அறிவித்த பின்னர் கலக்கமடைந்த மோடி, விவசாயிகளுக்கு தினந்தோறும் மூன்றரை ரூபாய் அளிக்கும் திட்டத்தை அறிவிக்கிறார்.
டோக்லாம் பிரச்சனை வந்தபோது சீனாவுக்கு சென்ற பிரதமர் மோடி, முன்னேற்பாடுகள் ஏதுமின்றி அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனாவுக்கு கைகூப்பி மண்டியிட்ட அவர், டோக்லாம் பகுதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இதுபற்றி இந்தியாவில் யாருக்கும் எதுவும் தெரியப்படுத்த மாட்டோம். ஊடகங்களை நாங்கள் ஊமையாக்கி விடுகிறோம் என சீன அரசிடன் கூறினார். இதுதான் மோடியின் நிஜமுகம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், ஒரு கையில் அன்பும் மற்றொரு கையில் வெறுப்புணர்ச்சியும் உள்ளது. உங்களுக்கு மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா, அல்லது கோட்சேவின் இந்தியா தேவையா? என்பதை உறுதிப்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமைய வேண்டும்’ என ராகுல் காந்தி கூறினார். #MahatmaGandhi #Godse #Rahulgandhi #Congressboothworkers
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X