என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மக்கள் தேவையை பூர்த்தி செய்யவில்லை- காங்கிரஸ் மீதும் பிரகாஷ்ராஜ் பாய்ச்சல்
Byமாலை மலர்23 March 2019 4:59 AM GMT (Updated: 23 March 2019 4:59 AM GMT)
தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டதாக பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். #LSPolls #PrakashRaj
சென்னை:
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஒரு ஆண்டாக அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜனதா தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
கடந்த மாதமே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரகாஷ் ராஜ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆளும் பா.ஜனதா எம்.பியான பி.சி.மோகனை எதிர்த்து பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டன. நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
பிரகாஷ்ராஜ் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு இருந்தார். தற்போது அந்த கட்சியையும் அவர் விமர்சித்து இருப்பதால் காங்கிரஸ் பிரகாஷ்ராஜ் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. #LSPolls #PrakashRaj
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஒரு ஆண்டாக அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜனதா தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
சமூக வலைதளங்கள் மூலமாக பா.ஜனதா அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த பிரகாஷ் ராஜ் நேரடி அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். கடந்த ஜனவரி 1-ந்தேதி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவிட்ட பிரகாஷ் ராஜ், ‘புதிய மாற்றத்துக்கான நேரம் இது. எனக்கான பொறுப்புகள் கூடி உள்ளன. உங்கள் அனைவரின் ஆதரவுடன், வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன். தொகுதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். பாராளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்’ என பதிவிட்டார். அதன் பின்னர் வரும் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடுவதாக அவர் டுவிட்டரிலேயே அறிவித்தார்.
கடந்த மாதமே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரகாஷ் ராஜ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆளும் பா.ஜனதா எம்.பியான பி.சி.மோகனை எதிர்த்து பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டன. நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
பிரகாஷ்ராஜ் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு இருந்தார். தற்போது அந்த கட்சியையும் அவர் விமர்சித்து இருப்பதால் காங்கிரஸ் பிரகாஷ்ராஜ் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. #LSPolls #PrakashRaj
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X