search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை- ராஜ்நாத் சிங்
    X

    மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை- ராஜ்நாத் சிங்

    பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று 2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #LokSabhaElections2019 #RajnathSingh #BJPManifesto2019
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். பெரும்பான்மை இல்லையெனில் நானோ, நிதின் கட்காரியோ பிரதமர் ஆவோம் என கூறுவது கற்பனையே.

    ஆரோக்கியமான ஜனநாயகத்தில் சாதி, மதம் மற்றும் சமயத்தை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது. இந்து, முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. 

    2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றுதான் கூறினோம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ‘பாஜகவின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்ட மனிதரின் குரலாக இருக்கிறது’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி ராஜ்நாத் சிங்கிடம் கேட்டபோது, ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவர் கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். #LokSabhaElections2019 #RajnathSingh  #BJPManifesto2019
    Next Story
    ×