search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவைத் தேர்தல் தொடங்கியது- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
    X

    மக்களவைத் தேர்தல் தொடங்கியது- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

    மக்களவைத் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் தவறாது வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    புதுடெல்லி:

    17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    Next Story
    ×