என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
Byமாலை மலர்29 Jan 2021 2:33 PM IST (Updated: 29 Jan 2021 2:33 PM IST)
பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவ தொடங்கிய போது கேரள மாநிலத்தில் தான் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக நோய் பாதிப்பு மேலும் குறையத் தொடங்கியது.
இதையடுத்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. சுற்றுலா மையங்கள், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் நடமாட தொடங்கினர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 5ஆயிரத்து 771பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அதிகரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகி இருக்கின்றன.
பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரக்கூடிய மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கட்சி பொதுக்கூட்டங்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களையே பங்கேற்க செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் ஓட்டல்கள் மற்றும் கடைகளை இரவு 10 மணிக்குள் மூடிவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு பயணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் மாநிலம் முழுவதும் 25ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவ தொடங்கிய போது கேரள மாநிலத்தில் தான் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக நோய் பாதிப்பு மேலும் குறையத் தொடங்கியது.
இதையடுத்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. சுற்றுலா மையங்கள், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் நடமாட தொடங்கினர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 5ஆயிரத்து 771பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அதிகரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகி இருக்கின்றன.
பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரக்கூடிய மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கட்சி பொதுக்கூட்டங்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களையே பங்கேற்க செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் ஓட்டல்கள் மற்றும் கடைகளை இரவு 10 மணிக்குள் மூடிவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு பயணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் மாநிலம் முழுவதும் 25ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X