என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திரிபுரா சபாநாயகர் ரேபதி மோகன் தாஸ் ராஜினாமா
Byமாலை மலர்2 Sept 2021 9:21 PM IST (Updated: 2 Sept 2021 9:21 PM IST)
திரிபுராவில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த ரேபதி மோகன் தாஸ், மாநில பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகர்தலா:
திரிபுரா மாநில பாஜகவின் மூத்த தலைவரும், சட்டசபை சபாநாயகருமான ரேபதி மோகன் தாஸ் (வயது 70) தனிப்பட்ட காரணங்களுக்காக சபாநாயகர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் பிஸ்வபந்து சென்னிடம் கொடுத்தார். கட்சிப் பணிகளுக்காக கூடுதல் நேரம் செலவிட்டு தீவிரமாக செயல்பட விரும்புவதாகவும், சபாநாயகர் பதவி தனக்கு கடினமாக இருப்பதாகவும் தாஸ் தெரிவித்தார். அதன்பின்னர், அவர் மாநில பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி ரேபதி மோகன் தாஸ் கூறுகையில், “இந்த பதவியில் இருந்து என்னை விடுவிக்கும்படி நீண்ட காலமாக முதல்வலிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். தொடர்ந்து வலியுறுத்தியதால், பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அதற்காக நான் பாஜக கட்சி மற்றும் முதல்வர் பிப்லப் தேப்-க்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேசமயம், எம்எல்ஏ பதவியில் இருந்தோ அல்லது கட்சியில் இருந்தோ விலகவில்லை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X