என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்25 Nov 2021 9:53 AM GMT (Updated: 25 Nov 2021 1:57 PM GMT)
கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் யஷ்வந்த் மதநிக்கர் தெரிவித்துள்ளார்.
தர்வாத்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு உள்ளதால், பொது மக்கள் கூட்டம் சேரும் இடங்களில் தனி நபர் இடைவெளி, கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அலட்சியமாக சுற்றி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பின்னர், சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
தொடர்ந்து, அவர்களுடன் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களை அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் யஷ்வந்த் மதநிக்கர் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. தெலுங்கானா சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்கு கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு உள்ளதால், பொது மக்கள் கூட்டம் சேரும் இடங்களில் தனி நபர் இடைவெளி, கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அலட்சியமாக சுற்றி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பின்னர், சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
தொடர்ந்து, அவர்களுடன் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களை அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் யஷ்வந்த் மதநிக்கர் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. தெலுங்கானா சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்கு கொரோனா தொற்று
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X