என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
உத்தரபிரதேசத்தில் 36-வது தடவையாக ஓட்டுபோட தயாராகும் 106 வயது முதியவர்
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் கங்கையா லால் குப்தா.
இவருக்கு தற்போது 106 வயது ஆகிறது. 1951-ம் ஆண்டு முதல் இவர் தேர்தலில் வாக்களித்து வருகிறார்.
1946-ம் ஆண்டு இவர் வடகிழக்கு ரெயில்வேயில் பணிக்கு சேர்ந்தார். அந்த ரெயில்வேயின் தொழிற் சங்கத்தில் இவர் ஒவ்வொரு ஆண்டும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் குரல் ஓட்டு மூலம் தேர்வு செய்யப்படுவார்.
அந்த வகையில் அவர் வடகிழக்கு ரெயில்வே சங்கத்தில் 60 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். ரெயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோரக்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர் தவறாமல் வாக்களித்து விடுவார். உத்தரபிரதேசத்தில் இது வரை 35 தடவை சட்டசபை, பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்துள்ளார்.
தற்போது 36-வது தடவையாக அவர் வாக்களிக்க உள்ளார். அவரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்